2021ம் ஆண்டு அரச புதிய கடமைகளை சத்தியப்பிரமாணம் செய்து பொறுப்பேற்கும் விசேட நிகழ்வு – 2021.01.01
2021ம் ஆண்டு அரச புதிய கடமைகளை சத்தியப்பிரமாணம் செய்து பொறுப்பேற்கும் விசேட நிகழ்வு 01.01.2021ம் திகதி இன்று வெள்ளிக் கிழமை காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந் நிகழ்வானது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எமது பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் உதவி பிரதேச செயலாளர், பொது சுகாதார பரிசோதகர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், மேலதிக மாவட்ட பதிவாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பட்டதாரிப் பயிலுனர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வின் போது நாட்டுக்காக உயிர் நீத்த படைவீரர்கள், அரச பணியாளர்களுக்கென இருநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காரியாலய அரச சேவையாளர்கள் சத்தியப்பிரமாண உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றது.

இரண்டாயிரத்து இருபத்தியோராம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும்
முதலாம் நாளாகிய இன்று, இலங்கை சனநாயக சோசலிச குடியரசு, இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் புது வருடமொன்றின் ஆரம்பத்தை கொண்டாடுகின்றது.
இன்றுடன் ஆரம்பிக்கும் புது வருடத்தில்,ஒரே நாட்டில், ஒரே தேசத்தில், ஒரே கொடியின் கீழ்,ஐக்கியமாகவும் ஒருமித்த மனதுடனும்,பாதுகாப்பான எமது தாய் நாட்டினுள்,நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கை முன்னிறுத்திய,ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கின்ற, பண்பாடுகளை கொண்ட, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவும், நிலைபேறான சுற்றாடல் முகாமைத்துவத்திற்கு முன்னுரிமை வழங்கும் பௌதீக வழ அபிவிருத்தியினூடாக மக்கள் மைய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கும் நவீன தொழிநுட்ப அறிவைப் பெற்ற மனித வழங்களை வழிநடத்தும் பரிசுத்தமான அரச நிர்வாகத்தின் ஒரு பங்காளரான நான், மக்களின் பணத்தில் சம்பளம் பெறும் ஓர் அரச ஊழியர் என்ற வகையில் அரச கொள்கைகளையும் குறிக்கோள்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு என்னிடம் ஒப்படைக்கப்படும் பணிகளை
வினைத்திறனுடன்,
பயனுறுதி வாய்ந்ததாக,
உறுதியான எண்ணத்துடன்,
உச்ச அளவு அற்பணிப்புடன்,
நேர்மையாக,
மக்களுக்கு சார்பாக,
நிறைவேற்றுவதாக சத்தியப்பிரமாணம் செய்கின்றேன்.
என்றவாறு அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்ததோடு தமது புதிய வருடத்திற்கான கடமைப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டனர்.
பிரதேச செயலாளரின் புத்தாண்டு வாழ்த்து அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தெரிவிக்கப்பட்டதோடு கடந்த வருடத்தில் வினைத்திறனான செயற்பாடுகளை எமது உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விதம் பற்றி கூறியதோடு அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டது. மக்களுக்காக சேவை வழங்கும் வினைத்திறனான சேவையின் அவசியம் இவ் வருடமும் தேவையென்னதால் அனைத்து உத்தியோகத்தர்களும் தங்களது பணியினை திறன்பட முன்னெடுக்க வேண்டுமெனவும் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் '' சுபீட்சத்தின் நோக்கு '' எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வினைத்திறனாகவும் நேர்மையாகவும் விரைவாகவும் செயற்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பிரதேச செயலாளர் தமது கருத்துரையை முன்வைத்தார்.
பின்னர் 2020ம் ஆண்டில் சிறப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டதோடு அனைத்து செயற்பாடுகளிலும் வினைத்திறனாக செயற்பட்ட கிளை உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர்.



