நேத்ரா அலைவரிசையில் இடம்பெறும் “குருகுலம்” கல்வி நிகழ்ச்சி நிரல்..........

இன்றைய உலகின் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாக காணப்படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன. இதனால் தான் இன்று கல்வியானது மனிதனின் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.

கல்வியின் சிறப்பு பற்றி கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப்படுகின்றான். இதற்கு காரணம் அவன் கற்ற கல்வியே.
கற்றவனுக்கு தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும். இப்படி கல்வி கற்றவனின் சிறப்பு இருக்க ஒருவன் தான் மரணிக்கும் வரை கல்வி கற்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது மிகவும் சிரமமானதாகும்.
எனினும் இன்றைய கால சூழ்நிலையில் Covid 19 தொற்று நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டு கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகள் கல்வி கூடங்களாக மாணவர்களின் கற்றலின் மூலமாக காணப்பட்டன எனினும் அவை இன்று மூடப்பட்டுள்ளமையினால் கற்றல் என்பது முற்றாக தடைபட்டுள்ளது எனலாம்.

எனினும் மாணவர்களின் கற்றல் செயற்பாடு தடைப்படக்கூடாது என்பதினை கருத்திற் கொண்டு அரசானது தொலைக்காட்சி ஊடான கல்வி இணையத்தளமூடான கல்வி என மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை நடாத்திச் செல்கின்றது. மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களுக்கான கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமான வகையில் அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது எனலாம்.
தழிழ், சிங்கள மொழிகளில் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன எனினும் அச் செயற்பாடுகளிலே தமிழ் மாணவர்கள் கலந்துகொள்கின்றார்களா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எமது மாணவர்களுக்கு எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன பாடம் எத்தனையாம் தரத்திற்கு கற்பிக்கப்படுகின்றது என்பதை அறியாமையினாலையே அவர்களால் கற்றலில் பங்குகொள்ள முடியாமல் போகின்றது.
எனவே மாணவர்கள் நேர அட்டவணையினை நன்கு அவதானித்து அதன்படி தொலைக்காட்சியை அவதானித்து கற்றலை மேற்கொள்ள வைக்கும் நோக்கத்தை மையப்படுத்துவதே இப் பதிவாகும். நேர அட்டவணை இங்கே தரப்பட்டுள்ளது இதனை மாணவர்கள் நன்கு அவதானித்து கற்றலை தொடரவேண்டுமென வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.



(S) - சிங்களமொழி நிகழ்ச்சிகள்.
(T) - தமிழ்மொழி நிகழ்ச்சிகள்.
(1st ) - மாதத்தினுடைய 1ம் வாரம்.
(2nd ) - மாதத்தினுடைய 2ம் வாரம்.
(3rd ) - மாதத்தினுடைய 3ம் வாரம்.
(4th ) - மாதத்தினுடைய 4ம் வாரம்.
- திங்கள், புதன், வெள்ளி - சிங்களமொழி மூலமான பாடங்கள்.
- செவ்வாய், வியாழன், சனி - தமிழ்மொழி மூலமான பாடங்கள்.
- ஞாயிறு - சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான பாடங்கள்.
கல்வி தொழிலுக்கு வழி காட்டுகிறது. கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்காக உதவும் கருவியாகும். அறிவியலும் சமூகமும் வாழ்நாள் முழுவதும் தொடரும் கருவியாகும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப் படுத்தவும் மேம்படுத்தவும் கல்வியை பயன்படுத்த வேண்டும்.
கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் பண்பு நேர்மை நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும். எனவே கல்வியானது ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருக்கிறது.



