பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கொரோணா செயலணி தொடர்பான கலந்துரையாடல். 2020.10.27
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா நோய்த்தொற்று காரணமாக மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதேச கொரோணா செயலணி பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோணா நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தொற்றுப்பரவலை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , சனநடமாட்டம் அதிகமான இடங்களை கட்டுப்படுத்துவதற்கும் தேவையான விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதில் உதவிப்பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிசார், கிராம உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல் போன்ற சுகாதார நடைமுறைகள் பேணப்படல் வேண்டும் எனவும் தவறுபவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துதல் மற்றும் ஆலயங்களில் பூசை வழிபாடுகளின்போது மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.





