பட்டதாரிப் பயிலுனர்களுக்கு பயிலுனர் நியமனம் வழங்கும் நிகழ்வு – 2021.02.01

4ம் கட்டமாக இணைக்கப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்கள் பட்டியலிலிருந்து விடுபட்ட பட்டதாரிப் பயிலுனர்களின் மேன் முறையீடுகளை கருத்தில் கொண்டு அரச சேவைகள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு பட்டதாரிப் பயிலுனர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று(2021.02.01) எமது பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.சத்யகௌரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.த.நிர்மலராஜ், நிருவாக உத்தியோகத்தர் திரு.வே.தவேந்திரன் மற்றும் பொறுப்பான உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

பட்டதாரிகளாக இருந்து அரச சேவைக்குள் உள் நுழையும் பட்டதாரிகள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதோடு அரச சேவைக்குள் உள் வாங்கப்படும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும், வினைத்திறனான செயற்பாடுகள் எவ்வாறு அமையப்படல் வேண்டும் போன்றதான விளக்கங்கள் பட்டதாரிப் பயிலுனர்களுக்கு வழங்கப்பட்டது.
அரச நிர்வாக முறைக்குள் உள்வாங்கப்படும் பட்டதாரிகள் திறம்பட்ட வினைத்திறனான சேவையினை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதோடு பட்டதாரிப் பயிலுனர்களாக தாங்கள் இணைக்கப்படும் காலகட்டத்தில் சிறந்தளவான பயிற்சிகளை பெற்று வினைத்திறனான சேவையினை மக்களுக்கு வழங்கவேண்டும் என பயிலுனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
திணைக்களங்களின் சேவைகள் மக்களுக்கு பூரணத்துவமாக கிடைக்கப் பெறல் வேண்டும் அவ்வாறான சேவைகளை வழங்கும் அரச ஊழியர்களாகிய நாம் மக்களுக்கான சேவையினை மையப்படுத்தியதான வேலைகளை செய்ய வேண்டும் என்பதோடு ஒருஉயரிய சேவையினை மக்களுக்கு வழங்க வேண்டும்.
ஒவ்வொரு அரச ஊழியர்களும் தங்களுக்கான பொறுப்புக்களை தாங்கள் செவ்வனே நிறைவேற்றுவார்களேயானால் பொது மக்களுக்கான சேவையில் எந்த குறைபாடுகளும் ஏற்படாது எனவே பட்டதாரிப் பயிலுனர்களாக அரச கடமையினை பொறுப்பேற்கும் பட்டதாரிகள் சிறப்பானதொரு சேவையினை மக்களுக்கு வழங்குவார்கள் என தாம் நம்புவதாக பிரதேச செயலாளர் தமது கருத்தினை முன்வைத்திருந்தார்.




