நாட்டில் வீட்டுத் தோட்டத்தை மக்களிடையே மேம்படுத்தி பசுமையானதொரு தேசத்தை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டமானது  29.03.2022 அன்று   காலை 9.18 சுபநேரத்தில் நாடுபூராவும் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.   மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவின் " பசுமையானதொரு தேசம் " ஆரம்ப நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் எருவில் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில்  மு.ப 09.18 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

 அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் கமத்தொழில் அமைச்சு உட்பட 8 அமைச்சுக்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறும் மேற்படி தேசிய வேலைத்திட்டத்திற்காக களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிலிருந்து 4430 வீட்டுத்தோட்ட பயனாளிகள்  இத்திட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு , 70 சமூகமட்ட மாதிரி வீட்டுத்தோட்டங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் இணைப்பாளர் திரு தஜீவரன், மாவட்ட செயலக உள்ளக கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஷ், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் S.நிர்மல்ராஜ், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி புவனேஸ்வரி  ஜீவகுமார் , சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் திரு K.உதயகுமார், மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் சிரேஸ்ட முகாமையாளர் திரு S.தயாபரன்,  கருத்திட்ட முகாமையாளர் S.தமிழ்வாணி, சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,விவசாய போதனாசிரியர்கள், ஆலய தலைவர், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், சமுர்த்தி பயனுகரிகள் எனப் பலரும் கலந்து கொண்டதோடு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான நாற்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

 

FB IMG 1648629225412

 

FB IMG 1648629261316    FB IMG 1648629255453 1

 

FB IMG 1648629247463    FB IMG 1648629214073

 

FB IMG 1648629216866

News & Events

14
Jun2026
தேசிய சுற்றாடல் தின  நிகழ்ச்சித் திட்டம் - 2026

தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித் திட்டம் - 2026

🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும்...

14
Jun2026
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண  நிகழ்வு

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு

💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை  சனநாயக சோசலிச ...

19
May2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி...

11
Nov2022
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில்...

Scroll To Top