Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsHome
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில் 3 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இது ஓய்வூதியம் உரித்தற்ற மக்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க செய்யும் சமூக திட்டமhகும். இதற்காக 2019 ம் ஆண்டு தேசிய விருதினையும் 2020 ம் ஆண்டு தேசிய ரீதியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தினையும் மற்றும் 2021 ம் ஆண்டு; தேசிய விருதினையும் பெற்றுள்ளது.
பொதுமக்களை சென்றடைய வழிகாட்டல்களும், இலக்குகள் நிர்ணயமும் சரியாக புரிந்து கொண்டு செயற்பட்ட உத்தியோகத்தர்களின் விடாமுயற்சியினாலும் தற்போதே மக்கள் அதன் பலனை அனுபவிக்க தொடங்கியுள்ளனர்.உணர்ந்து பங்காற்றிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், முன்பிள்ளை பருவ உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வெளிக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களனாலேயே இத்தகைய தேசிய விருதுகள் சாத்தியமாகியுள்ளது. அவர்களுக்கு இவ் விருதுகளை சமர்ப்பிப்பதில் பிரதேச செயலகம் பெருமையடைகின்றது.



முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் - 2022
முன்பள்ளி மாணவர்களுக்காக யுனிசெப் (UNICEF) நிறுவனத்தினால் ஐப்பசி, காரத்திகை, மார்கழி ஆகிய மாதங்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைவாக எமது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் குருக்கள்மடம் கலைவாணி பாலர் பாடசாலையில் இத்திட்டம் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் முதலாவதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.நிர்மல்ராஜ், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திரு மு.உதயகுமார், முன்பள்ளி பருவ உத்தியோகத்தர் திருமதி அ.சீவரெட்ணம், பிரிவுக்கான மருத்துவ மாது மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இளைஞர் யுவதிகளை இராணுவ சேவையில் இணைப்பதற்கான நேர்முகப்பரீட்சை !!! - 2020.11.17
இளைஞர் யுவதிகளை இராணுவ சேவையில் இணைப்பதற்கான நேர்முகப்பரீட்சை !!! - 2020.11.17

இலங்கை இராணுவ சேவைக்கு இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்ளும் பொருட்டு மண்முனை தென் எருவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகப்பரீட்சை செவ்வாய்க்கிழமை (17.11.2020) தொடக்கம் வெள்ளிக்கிழமை (20.11.2020) வரை மு.ப 8.00 - பி.ப 6.00 வரை பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
நேர்முகப் பரீட்சைக்கு கலந்துகொள்ள ஆர்வமுள்ள ஆண் (வயதெல்லை 18 - 24), பெண் (வயதெல்லை 18 - 22) கீழ்வரும் ஆவணங்களுடன் சமூகமளிக்க முடியும்.
* தேசிய அடையாள அட்டையின் பிரதி
* பிறப்பு சான்றிதழ்
* கல்வி சான்றிதழ்கள்
* விளையாட்டு சான்றிதழ்கள்
* குணநல சான்றிதழ் 02
* கிராம சேவகர் சான்றிதழ்
* பொலிஸ் சான்றிதழ்
ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான பொருத்தமான தொழிற்துறைகளை தேர்வு செய்வதற்கான செயலமர்வு - 2020.11.13
ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான பொருத்தமான தொழிற்துறைகளை தேர்வு செய்வதற்கான செயலமர்வு - 2020.11.13
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நாட்டை கட்டியெழுப்பும் "சுபீட்சத்தின் நோக்கு" எண்ணக்கருவிற்கு அமைய பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கீழ் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மண்முனை தென் எருவில் பிரதேச செயலக பிரிவில் முதற் கட்டமாக நியமனங்களை பெற்றுக் கொண்ட 17 பயிலுனர்களுக்கான பயிற்சிகளின் பொருத்தமான தொழிலை தேர்வு செய்வதற்கான செயலமர்வு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள துறைகளில் தமது தகுதி மற்றும் திறமை ஆகியவற்றை கொண்டு தமக்கு பொருத்தமான துறையினை எவ்வாறு தெரிவு செய்தல் மற்றும் online ஊடக பதிவுகளை மேற்கொள்ளல் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.
பயிலுனர்கள் தங்களுக்கு எவ்வாறான தொழிற்துறை சார் பயிற்சிகள் தேவை என்பதனை தாங்கள் எவ்வாறு தெரிவு செய்வது என்பதற்கான ஒரு திறனான தெளிவுபடுத்தல் பிரதேச செயலாளரினால் பயிலுனர்களுக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.










