முன்பள்ளி மாணவர்களுக்காக யுனிசெப் (UNICEF) நிறுவனத்தினால் ஐப்பசி, காரத்திகை, மார்கழி ஆகிய மாதங்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைவாக எமது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் குருக்கள்மடம் கலைவாணி பாலர் பாடசாலையில் இத்திட்டம் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் முதலாவதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.நிர்மல்ராஜ், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திரு மு.உதயகுமார், முன்பள்ளி பருவ உத்தியோகத்தர் திருமதி அ.சீவரெட்ணம், பிரிவுக்கான மருத்துவ மாது மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




